கோவை: கோவை வ.உ.சி., மைதானத்தில் நடைபெற்ற 72-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் போது மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 44,22,980 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
கோவை: கோவை வ.உ.சி., மைதானத்தில் நடைபெற்ற 72-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் போது மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 44,22,980 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
வ.உ.சி. மைதானத்தில் நடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, பல்வேறு துறைகள் சார்பில் ரூ. 44,22,980 ரூபாய்க்கான நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் த.நா. ஹரிஹரன் வழங்கினார்.
வேளாண்துறை சார்பில் வேளாண் பொருட்கள் வழங்குதலுக்கு ஐந்து பேருக்கு 66,477 ரூபாயும், தோட்டக் கலைத் துறை கோகோ நாற்றுகள் மற்றும் வெங்காயப் பட்டறை அமைக்க 3 பேருக்கு ரூ. 1,87,000-ம், தாட்கோ வங்கி மூலம் வாகனங்களுக்கு ஐந்து பயனாளிகளுக்கு ரூ. 26,93,427-ம் வழங்கப்பட்டது.
இதேபோல, மாற்றுத் திறனாளிகள் துறை சார்பில் செயற்கை கால் ஒரு நபருக்கு ரூ. 25,500-ம், மகளிர் மேம்பாட்டுத் திட்டம் சார்பில் தொழில் செய்யக் கடனுதவியாக பத்து பேருக்கு ரூ. 10,00,000-ம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் சார்பில் ரூ. 79,680 மதிப்புள்ள எட்டு பேருக்கு தையல் இயந்திரமும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலவாரியம் மூலம் ரூ. 90,324 செலவில் 18 பேருக்கு சலவைப் பெட்டியும் வழங்கப்பட்டது.

வருவாய் துறை மூலம் முதியோர் உதவித் தொகை அன்னூர் வட்டத்திற்கு 86 பேருக்கு ரூ. 86,000-ம், மேட்டுப்பாளையம் வட்டத்திற்கு 124 பேருக்கு 1,24,000-ம், சூலூர் வட்டம் 29 பேருக்கு ரூ. 55,000-ம், கோவை வடக்கு வட்டம் 15 பேருக்கு ரூ. 15,000 என 304 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
வ.உ.சி. மைதானத்தில் நடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, பல்வேறு துறைகள் சார்பில் ரூ. 44,22,980 ரூபாய்க்கான நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் த.நா. ஹரிஹரன் வழங்கினார்.
வேளாண்துறை சார்பில் வேளாண் பொருட்கள் வழங்குதலுக்கு ஐந்து பேருக்கு 66,477 ரூபாயும், தோட்டக் கலைத் துறை கோகோ நாற்றுகள் மற்றும் வெங்காயப் பட்டறை அமைக்க 3 பேருக்கு ரூ. 1,87,000-ம், தாட்கோ வங்கி மூலம் வாகனங்களுக்கு ஐந்து பயனாளிகளுக்கு ரூ. 26,93,427-ம் வழங்கப்பட்டது.
இதேபோல, மாற்றுத் திறனாளிகள் துறை சார்பில் செயற்கை கால் ஒரு நபருக்கு ரூ. 25,500-ம், மகளிர் மேம்பாட்டுத் திட்டம் சார்பில் தொழில் செய்யக் கடனுதவியாக பத்து பேருக்கு ரூ. 10,00,000-ம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் சார்பில் ரூ. 79,680 மதிப்புள்ள எட்டு பேருக்கு தையல் இயந்திரமும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலவாரியம் மூலம் ரூ. 90,324 செலவில் 18 பேருக்கு சலவைப் பெட்டியும் வழங்கப்பட்டது.

வருவாய் துறை மூலம் முதியோர் உதவித் தொகை அன்னூர் வட்டத்திற்கு 86 பேருக்கு ரூ. 86,000-ம், மேட்டுப்பாளையம் வட்டத்திற்கு 124 பேருக்கு 1,24,000-ம், சூலூர் வட்டம் 29 பேருக்கு ரூ. 55,000-ம், கோவை வடக்கு வட்டம் 15 பேருக்கு ரூ. 15,000 என 304 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.