கோவையில் பயனாளிகளுக்கு ரூ. 44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கோவை: கோவை வ.உ.சி., மைதானத்தில் நடைபெற்ற 72-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் போது மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 44,22,980 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

கோவை: கோவை வ.உ.சி., மைதானத்தில் நடைபெற்ற 72-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் போது மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 44,22,980 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. 

வ.உ.சி. மைதானத்தில் நடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, பல்வேறு துறைகள் சார்பில் ரூ. 44,22,980 ரூபாய்க்கான நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் த.நா. ஹரிஹரன் வழங்கினார். 

வேளாண்துறை சார்பில் வேளாண் பொருட்கள் வழங்குதலுக்கு ஐந்து பேருக்கு 66,477 ரூபாயும், தோட்டக் கலைத் துறை கோகோ நாற்றுகள் மற்றும் வெங்காயப் பட்டறை அமைக்க 3 பேருக்கு ரூ. 1,87,000-ம், தாட்கோ வங்கி மூலம் வாகனங்களுக்கு ஐந்து பயனாளிகளுக்கு ரூ. 26,93,427-ம் வழங்கப்பட்டது. 

இதேபோல, மாற்றுத் திறனாளிகள் துறை சார்பில் செயற்கை கால் ஒரு நபருக்கு ரூ. 25,500-ம், மகளிர் மேம்பாட்டுத் திட்டம் சார்பில் தொழில் செய்யக் கடனுதவியாக பத்து பேருக்கு ரூ. 10,00,000-ம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் சார்பில் ரூ. 79,680 மதிப்புள்ள எட்டு பேருக்கு தையல் இயந்திரமும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலவாரியம் மூலம் ரூ. 90,324 செலவில் 18 பேருக்கு சலவைப் பெட்டியும் வழங்கப்பட்டது. 



வருவாய் துறை மூலம் முதியோர் உதவித் தொகை அன்னூர் வட்டத்திற்கு 86 பேருக்கு ரூ. 86,000-ம், மேட்டுப்பாளையம் வட்டத்திற்கு 124 பேருக்கு 1,24,000-ம், சூலூர் வட்டம் 29 பேருக்கு ரூ. 55,000-ம், கோவை வடக்கு வட்டம் 15 பேருக்கு ரூ. 15,000 என 304 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...