11-வது முறையாகப் படைகளுக்கு தலைமை தாங்கிய கோவை மாநகர ஆயுதப்படை ஆய்வாளர் ரவிசந்திரன்

கோவை: கோவை வ.ஊ.சி. மைதானத்தில் நடைபெற்ற 72-வது சுதந்திர தினவிழாவில் அணிவகுத்தப் படைகளுக்கு மாநகர ஆயுதபடை ஆய்வாளர் ரவிசந்திரன் 11-வது முறையாக தலைமை தாங்கிய பெருமையை பெற்றார்.

கோவை: கோவை வ.ஊ.சி. மைதானத்தில் நடைபெற்ற 72-வது சுதந்திர தினவிழாவில் அணிவகுத்தப் படைகளுக்கு மாநகர ஆயுதபடை ஆய்வாளர் ரவிசந்திரன் 11-வது முறையாக தலைமை தாங்கிய பெருமையை பெற்றார்.

கோவை வ.ஊ.சி. மைதானத்தில் 72-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை 9.20 மணிக்கு மாவட்ட ஆட்சியர் த.நா. ஹரிஹரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். 

இதில், கோவை ஆயுதபடை ஆய்வாளர் ரவிசந்திரன் தலைமையில் 22 படைகளுக்கு 11-வது முறையாக தலைமை தாங்கினார். இவரது தலைமையில் ஆயுதப்படை முதலாம் அணியை உதவி ஆய்வாளர் முகமது அனஸும், இரண்டாம் அணியை சக்தியும், மூன்றாம் அணியை உதவி ஆய்வாளர் சக்தி ஆகியோர் தலைமை தாங்கினார்.



வாத்திய இசை குழுவை காவலர் விமல்ராஜ், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையை நிலைய அலுவலர் முத்துகுமாரசாமி, ஊர்காவல் படை ஆண்கள் பிரிவை எட்வின் ஆல்ட்ரினும், பெண்கள் பிரிவை உமாவதி, போக்குவரத்து காப்பாளர் பிரிவை சுரேஷ், தேசிய மாணவர் விமானப் படையை சேதுபதி, ராணுவப் படையை முனியசெல்வம், பெண்கள் பிரிவை பிரேமாவும், அவிநாசிலிங்கம் மேல்நிலைப் பள்ளி பெண்கள் படையை பீரீத்தி ஆகியோர் வழிநடத்தினர்.

சாலைப் பாதுகாப்பு படை ஆண்கள் படையை சதீஷும் மற்றும் பெண்கள் படைக்கு ரஜியா சுல்தானாவும், ரெட் கிராஸை உதயா மற்றும் பத்மலட்சுமியும், சாரணியர் இயக்கத்தை ரோசன் பாபு மற்றும் சோனாவும், தேசிய சேவை திட்டப் படையை சபில் நஸ்மின், நிறைவின் குதிரை படையை சுகந்தராஜா என 22 படைகளைச் சேர்ந்த 587 பேரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஏற்றுக் கொண்டார். பின்னர், அவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

மேலும், மாநகர காவல் ஆணையர் பெரியய்யாவும், வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...