வயநாட்டைச் சென்றடைந்தது '#CBE4KERALA' குழுவின் முதற்கட்ட நிவாரணப் பொருட்கள்

மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட '#CBE4KERALA' குழுவின் முதற்கட்ட நிவாரணப் பொருட்கள் வயநாட்டைச் சென்றடைந்துள்ளது.


மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட '#CBE4KERALA' குழுவின் முதற்கட்ட நிவாரணப் பொருட்கள் வயநாட்டைச் சென்றடைந்துள்ளது. 



கேரள மாநிலத்தில் பெய்து பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அம்மாநில மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நேரத்தில், நமது சகோதர, சகோதரிகளான கேரள மக்களுக்காக கரம் கொடுப்பது நமது கடமை என்று உணர்ந்தோம். சகோதரத்துவத்தை உணர்ந்த நமது கோவை மக்கள், கேரளாவில் தவிக்கும் மக்களுக்காக சிறு உதவியேனும் செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறான மக்களைத் திரட்டி பெரும் அளவிலான பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனுப்ப உள்ளோம். இந்த சமூக நலப் பணிக்காக கோவையில் உள்ள தனியார் அமைப்புகள், தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் முன்வந்துள்ளன. 

இதற்காக, '#CBE4KERALA' என்ற குழு உருவாக்கப்பட்டு, 12 இடங்களில் நிவாரண உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கேரள மக்களுக்கு உதவ நினைக்கும் கோவை மக்கள் நன்கொடையளிக்க தகுந்த பொருட்களை (புதிய உடைகள், புத்தகங்கள், பேனா, புத்தகப்பை, மெழுகுவர்த்திகள், சானிடரி நாப்கின்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள்) எங்களது குழுவினரான '#CBE4KERALA'-விடம் கொடுக்கலாம். 

இந்த நிலையில், மருந்து மற்றும் ஆடைகள் என முக்கியப் பொருட்களுடன் முதற்கட்ட நிவாரணப் பொருட்கள் நேற்றிரவு வயநாடு சென்றடைந்தது. அதனை அங்குள்ள தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்து வருகின்றனர். 



"கோவையில் இருந்து கொண்டு வரப்பட்ட நிவாரணப் பொருட்கள் பாதுகாப்பாக வயநாடு வந்தடைந்தது. எங்களது தன்னார்வலர்களும், நிவாரணப் பொருட்கள் ஏற்றி வந்த லாரியிலே இங்கு வந்தனர். அவர்கள் தேவைப்படுவோருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்," என்றார் #CBE4KERALA'-வின் உறுப்பினர் அருண் பாண்டியன். 

தொடர்ந்து, கேரளாவிற்கு பல்வேறு கட்டமாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட இருப்பதால், உதவ நினைப்பவர்கள் தயங்காமல் எங்களுடன் கைகோருங்கள். கோவையில் எந்தெந்த பகுதிகளில் நன்கொடைகளை வழங்கலாம் என்பதையும், அதற்கான தொடர்பு எண்களையும் கீழே உள்ள போஸ்டரில் பட்டியலிட்டுள்ளோம். உதவிக்கரம் நீட்ட முனைவோர் உடனடியாக உதவலாம்.

இதனிடையே, மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதிகளை '#CBE4KERALA' குழுவினர் சில புகைப்படங்களை எடுத்துள்ளனர்.











Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...