கோவையில் ரூ. 2 கோடி செலவில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடத்தப்படும் என சுதந்திர தின விழா உரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கோவையில் ரூ. 2 கோடி செலவில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடத்தப்படும் என சுதந்திர தின விழா உரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடி ஏற்றி வைத்து, கொட்டும் மழையிலும் வீர வணக்கம் செலுத்தினார். பின்னர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வணக்கம் தெரிவித்து சுதந்திர தின உரையாற்றினார்.
தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு துறையின் சாதனைகளை பட்டியலிட்டு அவர் பேசியதாவது:- இந்திய சுதந்திர போராட்டத்திற்கான வேள்வி தமிழகத்தில்தான் தொடங்கியது. சுதந்திரப் போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம் தான். நாட்டுக்காகப் போராடிய வரலாற்று நாயகர்களை நாம் போற்றி புகழ வேண்டும்.
ஜெயலலிதா வழியில், தமிழக அரசு ஏழைகளுக்கு பாடுபட்டு வருகிறது. தமிழக அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக, உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்து வருகிறது.
பள்ளிக் கல்வித்துறையில் அரசு சாதனை படைத்து வருகிறது. நீர்வள ஆதாரங்களைப் பாதுகாக்க குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 88 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அணை தூர்வாரப்பட்டுள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், ஜவுளி தொழிலின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், கோவையில் ரூ. 2 கோடி செலவில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடத்தப்படும், இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா, முதல்வர் நல் ஆளுமை உள்ளிட்ட விருதுகளை வழங்கினார்.
நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடி ஏற்றி வைத்து, கொட்டும் மழையிலும் வீர வணக்கம் செலுத்தினார். பின்னர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வணக்கம் தெரிவித்து சுதந்திர தின உரையாற்றினார்.
தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு துறையின் சாதனைகளை பட்டியலிட்டு அவர் பேசியதாவது:- இந்திய சுதந்திர போராட்டத்திற்கான வேள்வி தமிழகத்தில்தான் தொடங்கியது. சுதந்திரப் போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம் தான். நாட்டுக்காகப் போராடிய வரலாற்று நாயகர்களை நாம் போற்றி புகழ வேண்டும்.
ஜெயலலிதா வழியில், தமிழக அரசு ஏழைகளுக்கு பாடுபட்டு வருகிறது. தமிழக அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக, உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்து வருகிறது.
பள்ளிக் கல்வித்துறையில் அரசு சாதனை படைத்து வருகிறது. நீர்வள ஆதாரங்களைப் பாதுகாக்க குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 88 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அணை தூர்வாரப்பட்டுள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், ஜவுளி தொழிலின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், கோவையில் ரூ. 2 கோடி செலவில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடத்தப்படும், இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா, முதல்வர் நல் ஆளுமை உள்ளிட்ட விருதுகளை வழங்கினார்.