திருப்பூர்: திருப்பூரில் டாஸ்மாக் பாரில் அதிகளவு மது விற்பனைக்குத் தர மறுத்ததால், கடத்தப்பட்ட பார் உரிமையாளரை அரைமணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் டாஸ்மாக் பாரில் அதிகளவு மது விற்பனைக்குத் தர மறுத்ததால், கடத்தப்பட்ட பார் உரிமையாளரை அரைமணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.
திருப்பூர் - காங்கயம் சாலை, புதுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வருபவர் குமார். நேற்று இவரது பாருக்கு மது அருந்த வந்தவர்கள் நாளை (ஆக.,15) சுதந்திர தினத்தினால் கடை விடுமுறை என்பதால், அதிகளவில் மது வாங்கித் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால், இதற்கு பார் உரிமையாளர் மறுப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் பாரை அடித்து உடைத்து குமாரை அங்கிருந்து கடத்தி சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பார் ஊழியர்கள் ஊரக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், போலீசார் துரிதமாக செயல்பட்டு படியூர் சோதனை சாவடி அருகே பார் உரிமையாளரை மீட்டனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஆயுதங்கள், இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
திருப்பூர் - காங்கயம் சாலை, புதுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வருபவர் குமார். நேற்று இவரது பாருக்கு மது அருந்த வந்தவர்கள் நாளை (ஆக.,15) சுதந்திர தினத்தினால் கடை விடுமுறை என்பதால், அதிகளவில் மது வாங்கித் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால், இதற்கு பார் உரிமையாளர் மறுப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் பாரை அடித்து உடைத்து குமாரை அங்கிருந்து கடத்தி சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பார் ஊழியர்கள் ஊரக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், போலீசார் துரிதமாக செயல்பட்டு படியூர் சோதனை சாவடி அருகே பார் உரிமையாளரை மீட்டனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஆயுதங்கள், இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.