மதுவிற்பனைக்கு தர மறுத்ததால் கடத்தப்பட்ட பார் உரிமையாளர் அரை மணி நேரத்தில் மீட்பு: போலீசாருக்கு குவியும் பாராட்டு

திருப்பூர்: திருப்பூரில் டாஸ்மாக் பாரில் அதிகளவு மது விற்பனைக்குத் தர மறுத்ததால், கடத்தப்பட்ட பார் உரிமையாளரை அரைமணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் டாஸ்மாக் பாரில் அதிகளவு மது விற்பனைக்குத் தர மறுத்ததால், கடத்தப்பட்ட பார் உரிமையாளரை அரைமணி நேரத்தில் போலீசார் மீட்டனர். 

திருப்பூர் - காங்கயம் சாலை, புதுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வருபவர் குமார். நேற்று இவரது பாருக்கு மது அருந்த வந்தவர்கள் நாளை (ஆக.,15) சுதந்திர தினத்தினால் கடை விடுமுறை என்பதால், அதிகளவில் மது வாங்கித் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால், இதற்கு பார் உரிமையாளர் மறுப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் பாரை அடித்து உடைத்து குமாரை அங்கிருந்து கடத்தி சென்றுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, பார் ஊழியர்கள் ஊரக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், போலீசார் துரிதமாக செயல்பட்டு படியூர் சோதனை சாவடி அருகே பார் உரிமையாளரை மீட்டனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஆயுதங்கள், இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...