கோவை மாநகராட்சி அலுவலகத்தில் 72-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவை: 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் விஜயகார்த்திகேயன் தேசிய கொடியேற்றினார்.



கோவை:  கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் தலைமையில் 72-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



மாநகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் சிலைக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் மற்றும் துணை ஆணையாளர் காந்திமதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், விக்டோரிய ஹால் அருகே தேசிய கொடியை ஏற்றிவைத்து, நாட்டின் தேசிய கொடியை வணங்கி மரியாதை செலுத்தினார்.



அதனைத்தொடர்ந்து, மாநகராட்சியில் 25 ஆண்டு காலம் பணிபுரிந்த ஊழியர்களுக்கும், திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கும், சிறப்பாகப் பணியாற்றிய ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களையும், கேடயங்களையும் ஆணையாளர் விஜயகார்த்திகேயன் வழங்கினார். 



மேலும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாகப் பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன், மிதிவண்டியும் வழங்கப்பட்டது. பின்னர், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...