கோவை வ.உ.சி., மைதானத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினார் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன்

கோவை: நாட்டின் 72-வது சுதந்திர தின விழாவையொட்டி, கோவை வ.உ.சி., மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் த.நா. ஹரிஹரன் தேசிய கொடியேற்றினார்.


கோவை: நாட்டின் 72-வது சுதந்திர தின விழாவையொட்டி, கோவை வ.உ.சி., மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் த.நா. ஹரிஹரன் தேசிய கொடியேற்றினார்.



நாடு முழுவதும் 72-வது சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியரின் தலைமையிலும் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செய்வது வழக்கம். அந்த வகையில், கோவை மாவட்டத்தில் வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டது. இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், கோவை மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா, மாநகராட்சி க. விஜயகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். காலை 09.20 மணியளவில் மாவட்ட ஆட்சியர் த.நா. ஹரிஹரன் மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதோடு, போலீஸ் படை, ஸ்கவுட், தேசிய மாணவர் படை ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் ஆடல், பாடல் என கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.



இறுதியில், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டது. நடப்பாண்டில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...