தமிழகத்தில் நிலவும் அனைத்து விவகாரங்களுக்கும் பா.ஜ.க., பின்னணி எனக் கூறுவது ஒருவகையில் மகிழ்ச்சி : மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன்

கோவை: தி.மு.க., வில் அழகிரியால் எழுந்துள்ள பிரச்சனைகள் உள்பட தமிழகத்தின் அனைத்து விவகாரங்களிலும் பா.ஜ.க., பின்னணி என்பது ஒரு வகையில் மகிழ்ச்சியளிப்பதாக மாநில பா.ஜ.க., செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை: தி.மு.க., வில் அழகிரியால் எழுந்துள்ள பிரச்சனைகள் உள்பட தமிழகத்தின் அனைத்து விவகாரங்களிலும் பா.ஜ.க., பின்னணி என்பது ஒரு வகையில் மகிழ்ச்சியளிப்பதாக மாநில பா.ஜ.க., செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். 

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான பா.ஜ.க.,வின் தேர்தல் பிரிவு பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பா.ஜ.க., மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார். 



அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் ரஜினி., கமல் என யார் கட்சி ஆரம்பித்தாலும், அரசாங்கத்தின் செயல்பாடாக இருந்தாலும், துறை சார்ந்த அதிகாரிகளின் செயல்பாடாக இருந்தாலும் அனைத்திற்கும் பா.ஜ.க., பின்னணியில் இருப்பதாகக் கூறும் மனநிலை உருவாகியுள்ளது. அழகிரி அவரது தந்தை உயிரோடு இருந்த காலத்திலேயே கட்சிக்குள் தனது கருத்தை வலியுறுத்தியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட போதெல்லாம் யாரும் பா.ஜ.க., பற்றி யாரும் கூறவில்லை. தற்போது, அழகிரி ஏதேனும் கருத்தை சொன்னால் பா.ஜ.க., பின்னணியில் உள்ளது என்கிறார்கள். 

மஞ்சள் காமாலை வந்தவர்களுக்குப் பார்த்ததெல்லாம் மஞ்சளாகத் தெரியும் என சொல்வதைப்போல தமிழகத்தில் தற்போது பார்ப்பது அனைத்திலும் பா.ஜ.க.,வை போல தெரிகிறது. இது எங்களுக்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சிதான். ஏனெனில், பா.ஜ.க.,வை தமிழகத்தில் பெரிய அரசியல் சக்தியாக பிற கட்சிகள் நினைக்கின்றனர், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...