கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரையோரப் பகுதிகளை அதி.மு.க., எம்.பி. ஏ.கே., செல்வராஜ் நேரில் பார்வையிட்டார்.
கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரையோரப் பகுதிகளை அதி.மு.க., எம்.பி. ஏ.கே., செல்வராஜ் நேரில் பார்வையிட்டார்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவான 100 அடியை எட்டியுள்ளதால், பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றில் திறக்கப்படுகிறது. இதனால், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே., செல்வராஜ் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் ஆற்றுப் பகுதிகளில் கரையோரத்தில் பார்வையிட்டார். மேலும், சிறுமுகை அருகே உள்ள கிச்சகத்தியூர் பாலத்தில் தேங்கி உள்ள தண்ணீரையும், வச்சினம்பாளையம் வேடர்களின் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதையும் ஆய்வு செய்தார்.
பின்னர், மேட்டுப்பாளையம் சமண்ணா வாட்டர் ஹவுஸ் பகுதியில் உள்ள குடியிருப்புகள் அருகே தண்ணீர் தேங்கி நிற்பதைப் பார்வையிட்டு பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எம்.பி., ஏ.கே. செல்வராஜ் ஆணை பிறப்பித்தார்.
ஆலாங்கொம்பு பகுதியில் குளிப்பதற்கு ஒரு முதியவர் ஆற்றில் இறங்கிய போது வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு, தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். உடனடியாக தீயணைப்புத் துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முதியவர் மீட்கப்பட்டார். பின்னர், அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, வேண்டிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களுக்குத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, காரமடை ஒன்றிய கழக செயலாளர் பி.டி. கந்தசாமி, ஒன்றிய கழக துணை செயலாளர் ரங்கராஜ் எல்.எஸ்.புரம் ரவி. கே தமிழ் சேட் ஆகியோர் உடன் இருந்தனர்.. இதனிடையே, பவானி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவான 100 அடியை எட்டியுள்ளதால், பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றில் திறக்கப்படுகிறது. இதனால், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே., செல்வராஜ் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் ஆற்றுப் பகுதிகளில் கரையோரத்தில் பார்வையிட்டார். மேலும், சிறுமுகை அருகே உள்ள கிச்சகத்தியூர் பாலத்தில் தேங்கி உள்ள தண்ணீரையும், வச்சினம்பாளையம் வேடர்களின் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதையும் ஆய்வு செய்தார்.
பின்னர், மேட்டுப்பாளையம் சமண்ணா வாட்டர் ஹவுஸ் பகுதியில் உள்ள குடியிருப்புகள் அருகே தண்ணீர் தேங்கி நிற்பதைப் பார்வையிட்டு பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எம்.பி., ஏ.கே. செல்வராஜ் ஆணை பிறப்பித்தார்.
ஆலாங்கொம்பு பகுதியில் குளிப்பதற்கு ஒரு முதியவர் ஆற்றில் இறங்கிய போது வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு, தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். உடனடியாக தீயணைப்புத் துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முதியவர் மீட்கப்பட்டார். பின்னர், அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, வேண்டிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களுக்குத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, காரமடை ஒன்றிய கழக செயலாளர் பி.டி. கந்தசாமி, ஒன்றிய கழக துணை செயலாளர் ரங்கராஜ் எல்.எஸ்.புரம் ரவி. கே தமிழ் சேட் ஆகியோர் உடன் இருந்தனர்.. இதனிடையே, பவானி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.