கோவை: சுந்தராபுரம் அருகே கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், ஓட்டுநரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோவை: சுந்தராபுரம் அருகே கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், ஓட்டுநரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சுந்தராபுரம் பகுதியில் கடந்த ஆக.,1-ம் தேதி அதிவேகமாக சென்ற சொகுசு கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதியது. இந்த விபத்தில் நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அந்த காரின் ஓட்டுநர் ஜெகதீஸ் குமாரை பிடித்த போலீசார் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் ஓட்டுநர் ஜெகதீஸ் குமார் மதுபோதையில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் வாகனம் ஓட்டி வரும் போது, ஆல்கஹால் ஏதும் பயன்படுத்தவில்லை என ரத்த பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே வழக்கில் இரு வெவ்வேறு விதமான அறிக்கையால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கார் ஓட்டுநர் ஜெகதஸ் குமார் மீது 279, 337, 338, 304 (2) ஐ.பி.சி., என்ற 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், கூடுதலாக மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளான 183, 184, 185 ஆகிய மூன்று பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சுந்தராபுரம் அருகே கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், ஓட்டுநரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் சார்பில் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, போலீசாரின் மனுவை ஜெ.எம். நீதிபதி பாலமுருகன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சுந்தராபுரம் பகுதியில் கடந்த ஆக.,1-ம் தேதி அதிவேகமாக சென்ற சொகுசு கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதியது. இந்த விபத்தில் நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அந்த காரின் ஓட்டுநர் ஜெகதீஸ் குமாரை பிடித்த போலீசார் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் ஓட்டுநர் ஜெகதீஸ் குமார் மதுபோதையில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் வாகனம் ஓட்டி வரும் போது, ஆல்கஹால் ஏதும் பயன்படுத்தவில்லை என ரத்த பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே வழக்கில் இரு வெவ்வேறு விதமான அறிக்கையால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கார் ஓட்டுநர் ஜெகதஸ் குமார் மீது 279, 337, 338, 304 (2) ஐ.பி.சி., என்ற 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், கூடுதலாக மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளான 183, 184, 185 ஆகிய மூன்று பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சுந்தராபுரம் அருகே கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், ஓட்டுநரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் சார்பில் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, போலீசாரின் மனுவை ஜெ.எம். நீதிபதி பாலமுருகன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.