தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையைக் கொன்றேன்: 3 மாதக் குழந்தையைக் கொலை செய்த தாய் அதிர்ச்சி வாக்குமூலம்

கோவை: தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததன் காரணமாக 3 மாதக் குழந்தையைக் கொலை செய்ததாக தாய் வனிதா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை: தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததன் காரணமாக 3 மாதக் குழந்தையைக் கொலை செய்ததாக தாய் வனிதா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தபுரத்தில் உள்ள 3-வது வீதியில் வசித்து வரும் தம்பதிகள் கார்த்திக் மற்றும் வனிதா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில், கவிஸ்ரீ என்ற 3 மாத பெண் குழந்தை நேற்று கழுத்தறுக்கப்பட்ட நிலையில், வீட்டின் அருகே பிணமாக கண்டெடுக்கப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தாய் வனிதா தான் குழந்தையை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் போலீசாரிடம் தாய் வனிதா வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :- தனது குழந்தை கவிஸ்ரீ தனக்கும் தன்னோடு தகாத உறவுக் காதலன் சீனிவாசனுக்கும் இடைஞ்சலாக இருந்தது. இதனால், இருவரும் சேர்ந்து குழந்தையை கொல்ல முடிவு செய்தோம். அதன்படி, சீனிவாசனும், நானும் சேர்ந்து குழந்தையை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தோம். பின்னர், குழந்தையை துணியில் சுற்றி குப்பைத் தொட்டியின் அருகில் உள்ள முட்புதரில் தூக்கி வீசினோம், இவ்வாறு கூறினார். 

இந்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து, தகாத உறவுக் காதலன் ஸ்ரீனிவாசனையும் போலீசார் கைது செய்தனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...