17 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பர்பவானி, எமரால்டு, அவலாஞ்சி அணைகள் திறப்பு

நீலகிரி: தொடர் கனமழையின் காரணமாக 17 ஆண்டுகளுக்குப் பின் அப்பர் பவானி, எமரால்டு, அவலாஞ்சி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன.

நீலகிரி: தொடர் கனமழையின் காரணமாக 17 ஆண்டுகளுக்குப் பின் அப்பர் பவானி, எமரால்டு, அவலாஞ்சி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன. 



நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் பெரிய அணை மஞ்சூர் அருகே உள்ள அப்பர் பவானி அணையாகும். 210 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி உள்ளிட்ட மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, அப்பர்பவானி அணையானது மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், இப்பகுதியில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. 



இதனால், நீர்வரத்து அதிகரித்த நிலையில், அப்பர் பவானி அணை முழு கொள்ளளவை எட்டியது. வினாடிக்கு 1,000 கனஅடிக்கு மேல் நீர்வரத்து காணப்படுவதால், அணையின் பாதுகாப்பு கருதி அப்பர் பவானி அணை திறக்கப்பட்டுள்ளது.

கடைசியாக கடந்த 2001-ம் ஆண்டு அப்பர்பவானி அணை திறந்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து, 17 ஆண்டுகளுக்குப் பிறகு அணை தற்போது திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்பர்பவானி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரானது அடர்ந்த காடுகள் வழியே கேரளா மாநிலத்திற்குள் பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து மீண்டும் தமிழகத்தின் அத்திக்கடவு வழியாக பில்லுார் அணைக்கு செல்கிறது என்பது சிறப்பம்சமாகும். 

இதேபோல, மஞ்சூர் அருகே உள்ள அவலாஞ்சி, எமரால்டு, குந்தா உள்ளிட்ட அணைகளில் இருந்தும், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அப்பர்பவானி, எமரால்டு, அவலாஞ்சி ஆகிய அணைகளில் இருந்து ஒரே நேரத்தில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், அப்பகுதியில் உள்ள 12 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...