நீலகிரி மாவட்ட செயலாளர் கே.ஆர். அர்ஜுணனை மாற்ற வலியுறுத்தி ஒருமனதாக முடிவு

நீலகிரி: நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கே.ஆர். அர்ஜூணனை மாற்ற வலியுறுத்தி முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் புத்திச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

நீலகிரி: நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கே.ஆர். அர்ஜூணனை மாற்ற வலியுறுத்தி முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் புத்திச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., செயலாளராகவும், மாநிலங்கவை உறுப்பினருமாக கே.ஆர். அர்ஜூணன் இருந்து வருகிறார். இவர் தனக்கு வேண்டிய பட்டவர்களுக்கு மட்டுமே பதவிகளை வழங்கி வருவதாகவும், கூட்டுறவு தேர்தலில் மாற்று கட்சியினருக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறி இன்று உதகை தேவாங்கர் மண்டபத்தில் அதிருப்தியாளர்களின் கூட்டம் நடைபெற்றது. 



இதில், முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் புத்திச்சந்திரன் மற்றும் முன்னாள் பால்வளத் தலைவர் எல்.மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கே.ஆர். அர்ஜூணன் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவர்களுக்கு பதவி வழங்கியதாகவும், தொடர்ந்து உறுப்பினர்களில் அதிருப்தியை சந்தித்து வருவதால் அவரை மாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒரு கமிட்டி அமைத்து இன்றோ அல்லது நாளை தலைமையை சந்திக்க முடிவெடுக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...