கோவை : புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது தலை முடியை தானமாக வழங்கினர்.
கோவை : புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது தலை முடியை தானமாக வழங்கினர்.

பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்லூரியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் சார்பில் 'விருக்ஷா' என்ற வாராந்திர நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக 'ரெட் ரிப்பன்' என்ற தலைப்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கீமோதெரபி என்ற சிகிச்சைக்காக தலைமுடியை இழந்தவர்களுக்கு உதவும் வகையில், தலைமுடியை தானமாக வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்லூரி, பெண்கள் பாலிடெக்னிக் உள்ளிட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அதிகபட்சமாக பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் 30 பேர் தங்களது முடியை தானமாக கொடுத்தனர்.

இதில், சேகரிக்கப்பட்ட முடியை இந்திய புற்றுநோய் மையத்தின் உதவியுடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க இருக்கின்றனர்.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மாணவர் டி. திரவியம் பேசுகையில், " கோவை மாநகரில் உள்ள கல்லூரிகிளில் இருந்து ஏராளமான மாணவிகள் தங்களது முடியை தானமாக வழங்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து 10 இன்ச்சிற்கும் அதிகமான முடிகளைப் பெற்றுள்ளோம்," என்றார்.