கோவை: மருந்து, துணி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் விரைவில் கேரளா-வின் மூன்று மாவட்டங்களுக்கு விரைகிறது கோவையின் #CBE4KERALA குழு.
கோவை: மருந்து, துணி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் விரைவில் கேரளா-வின் மூன்று மாவட்டங்களுக்கு விரைகிறது கோவையின் #CBE4KERALA குழு.
கேரள மாநிலத்தில் பெய்து பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அம்மாநில மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நேரத்தில், நமது சகோதர-சகோதரிகளான கேரள மக்களுக்காக கரம் கொடுப்பது நமது கடமை என்று உணர்ந்தோம். சகோதரத்துவத்தை உணர்ந்த நமது கோவை மக்கள், கேரளாவில் தவிக்கும் மக்களுக்காக சிறு உதவியேனும் செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டிருக்கின்றனர்.
அவ்வாறான மக்களைத் திரட்டி பெரும் அளவிலான பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனுப்ப உள்ளோம். இந்த சமூக நலப் பணிக்காக கோவையில் உள்ள தனியார் அமைப்புகள், தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் முன்வந்துள்ளன.
முதற்கட்டமாக, வயநாடு, இடுக்கி மற்றும் மணப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு மருந்து பொருட்கள் மற்றும் உடைகள் அனுப்பப்பட உள்ளது. கேரள மக்களுக்கு உதவ நினைக்கும் கோவை மக்கள் நன்கொடையளிக்க தகுந்த பொருட்களை (புதிய உடைகள், புத்தகங்கள், பேனா, புத்தகப்பை, மெழுகுவர்த்திகள், சானிடரி நாப்கின்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள்) எங்கள் குழுவினரிடம் கொடுக்கலாம்.

கோவையில் எந்தெந்த பகுதிகளில் நன்கொடைகளை வழங்கலாம் என்பதையும், அதற்கான தொடர்பு எண்களையும் கீழே உள்ள போஸ்டரில் பட்டியலிட்டுள்ளோம். உதவிக்கரம் நீட்ட முனைவோர் உடனடியாக உதவலாம்.

#CBE4KERALA #CBEKER4U