திருமளைக்கவுண்டம்பாளையம் பள்ளியின் மதிய உணவு விவகாரம் : சமையலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

திருப்பூர் : திருமளைக்கவுண்டம்பாளையம் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக சமையலர் பாப்பாள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு பிரிவினர் மனு அளித்தனர்.

திருப்பூர் : திருமளைக்கவுண்டம்பாளையம் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக சமையலர் பாப்பாள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு பிரிவினர் மனு அளித்தனர்.



அவினாசி அருகே உள்ள திருமளைக்கவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த மாதம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பாப்பாள் என்பவர் சமைக்கக்கூடாது என ஒரு பிரிவினர் பணி செய்யவிடாமல் தடுத்தனர். இப்பிரச்சினை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பிரச்சினைக்குக் காரணமான 87 பேர் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்குப்பதிவு செய்ததோடு 8 பேர் கைது செய்யப்பட்டனர். 

இதனிடையே, ஆகஸ்ட் 7-ம் தேதி பாப்பாள் சமைத்த உணவில் பல்லி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனைச் சாப்பிட்ட 11 மாணவிகள் மற்றும் 1 மாணவர் உட்பட 12 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அவினாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சர்ச்சை எழுந்ததையடுத்து அஜாக்கிரதையாக செயல்பட்டதாக பாப்பாள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 



இந்த நிலையில், சமையலர் பாப்பாள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி ஒரு பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கும்.மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...