யானை வழித்தட ஆக்கிரமிப்பு விவகாரம்: மசினக்குடியில் மூன்று நாட்கள் கடையடைப்பு போராட்டம்

நீலகிரி: மாயார் யானை வழித்தடத்தில் உள்ள ரிசார்ட்கள் மூடப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மசினக்குடி, பொக்காபுரம் பகுதிகளில் உள்ள வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

நீலகிரி: மாயார் யானை வழித்தடத்தில் உள்ள ரிசார்ட்கள் மூடப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மசினக்குடி, பொக்காபுரம் பகுதிகளில் உள்ள வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.



நீலகிரி மாவட்டம் மாயார் யானை வழித்தடத்தில் உள்ள 27 ரிசார்ட்களை உடனடியாக மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் பேரில் ரிசார்ட் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சீல் வைக்கும் பணி தொடங்கியது. (11-ம் தேதி) நேற்று முன்தினம் 24 ரிசார்ட்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து, மசினக்குடி அருகேயுள்ள நார்தன் ஹே ரிசார்ட்டுக்கு அதிகாரிகள் சீல் வைக்கச் சென்றனர். அப்போது அப்பகுதியில் இருந்த யானைகள் விரட்டியதால், அதிகாரிகள் அங்கிருந்து திரும்பினர். மீண்டும் நேற்று காலை அப்பகுதிக்குச் சென்று ரிசார்ட்க்களுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் உத்தரவுப் படி 27 ரிசார்ட்டுகளுக்கும் சீல் வைக்கப்பட்டதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

கடையடைப்பு







ரிசார்ட்டுகளைத் தொடர்ந்து 821 குடியிருப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி மசினக்குடி, பொக்காபுரம் பகுதிகளில் மூன்று நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, மசினக்குடி, பொக்காபுரம், மாவன்ஹல்லா பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. மேலும், வாடகை வாகனங்கள் இயங்கவில்லை. இதனால், மசினக்குடி பஜார் வெறிச்சோடியது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...