கோவை : 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மகாகவி பாரதியைப் போற்றும் நிகழ்வாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் 'அக்னி குஞ்சு' நாட்டிய நாடகம் அரங்கேற்றப்பட்டது.
கோவை : 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மகாகவி பாரதியைப் போற்றும் நிகழ்வாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் 'அக்னி குஞ்சு' நாட்டிய நாடகம் அரங்கேற்றப்பட்டது.
கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சஷ்மிதா கே அரோராஸ் சங்கரம் குழுவினர் வழங்கிய நாட்டிய நாடகத்தில் பாரதியின் புகழ்மிக்க கீதங்களான செந்தமிழ் நாடெனும் போதினிலே, ஆடுவோமே பள்ளி பாடுவோமே, மனதில் உறுதி வேண்டும், ஓம் சக்தி ஓம் சக்தி ஓம், ஒளி படைத்த கண்ணினாய் உள்ளிட்ட பல பாடல்களை இசைக் கலைஞர்கள் பாடி அசத்தினர்.
இந்த இசைக்கேற்ப சங்கரம் குழுவின் மாணவிகள் ஆடிய நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. சுதந்திரத்தின் அருமை, பாரத கலாச்சாரத்தின் பெருமை, கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் என அவர்கள் ஆற்றிய இணைப்புரை பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தது. மேலும், பரதத்திலேயே கரகம் சுமந்து ஆடியது, பாடல் வரிகளுக்கும் அபிநயத்திற்கும் பொருத்தமான ஒளியமைப்பு ஆகிய புதுமை அம்சங்கள் நாட்டிய நாடக அனுபவத்தை ரசித்தனர். விழாவின் நிறைவில் நாட்டியம் ஆடிய மாணவிகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன் சான்றிதழ்கள் வழங்கினார்.
கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சஷ்மிதா கே அரோராஸ் சங்கரம் குழுவினர் வழங்கிய நாட்டிய நாடகத்தில் பாரதியின் புகழ்மிக்க கீதங்களான செந்தமிழ் நாடெனும் போதினிலே, ஆடுவோமே பள்ளி பாடுவோமே, மனதில் உறுதி வேண்டும், ஓம் சக்தி ஓம் சக்தி ஓம், ஒளி படைத்த கண்ணினாய் உள்ளிட்ட பல பாடல்களை இசைக் கலைஞர்கள் பாடி அசத்தினர்.
இந்த இசைக்கேற்ப சங்கரம் குழுவின் மாணவிகள் ஆடிய நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. சுதந்திரத்தின் அருமை, பாரத கலாச்சாரத்தின் பெருமை, கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் என அவர்கள் ஆற்றிய இணைப்புரை பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தது. மேலும், பரதத்திலேயே கரகம் சுமந்து ஆடியது, பாடல் வரிகளுக்கும் அபிநயத்திற்கும் பொருத்தமான ஒளியமைப்பு ஆகிய புதுமை அம்சங்கள் நாட்டிய நாடக அனுபவத்தை ரசித்தனர். விழாவின் நிறைவில் நாட்டியம் ஆடிய மாணவிகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன் சான்றிதழ்கள் வழங்கினார்.