முறையான குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து பல்லடம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

திருப்பூர் : கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து பல்லடம் ஊராட்சி அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து பல்லடம் ஊராட்சி அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பல்லடத்தை அடுத்த வடுகபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது சின்னூர் வடுகபாளையம் கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதாகத் தெரிகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் மனு அளித்துள்ளனர். இருப்பினும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 



இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமியை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 



கடந்த சில மாதங்களாகவே தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், குடிநீருக்காக அவதியுறுவதாகவும் அவரிடம் புகார் தெரிவித்தனர். அப்போது, கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர் உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும், நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...