கோவையிலும் யானை வழித்தடங்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் - தமிழ்நாடு விவசாய சங்கம் மனு

கோவை: கோவையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள யானை வழித்தடங்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டது.

கோவை: கோவையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள யானை வழித்தடங்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டது.

நீலகிரியில் யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இதற்கான நடவடிக்கையும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் போல கோவை மாவட்டத்திலும் மேட்டுப்பாளையம், மதுக்கரை, போளுவாம்பட்டி, உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

மேலும், அந்த மனுவில், நீலகிரி மாவட்டத்திற்கு வழங்கி உள்ள தீர்ப்பு மேற்கு தொடர்ச்சி மலையோரம் உள்ள கோவை மாவட்டத்திற்கு பொருந்தும் என்றும், இதே போல நொய்யல் நீர் வழிப்பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்.வழிப்பாதையை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...