குடிசை மாற்று வாரியத்தால் தத்தெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து வெளியேறுமாறு மிரட்டல்: அதிகாரிகள் மீது ஜீவா நகர் மக்கள் புகார்

கோவை : கடந்த 30 ஆண்டுகளாக கிரையத் தொகையைச் செலுத்தி வந்த நிலையிலும், மாநகராட்சி, நகரமைப்பு அலுவலர்கள் தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேறுமாறு மிரட்டுவதாகக் கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஜீவா நகர் மக்கள் புகார் அளித்துள்ளனர்.

கோவை: கடந்த 30 ஆண்டுகளாக கிரையத் தொகையைச் செலுத்தி வந்த நிலையிலும், மாநகராட்சி, நகரமைப்பு அலுவலர்கள் தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேறுமாறு மிரட்டுவதாகக் கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஜீவா நகர் மக்கள் புகார் அளித்துள்ளனர். 

 

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எருக்கம்பெனி அருகே அமைந்துள்ளது ஜீவா நகர். இப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 1988-ம் ஆண்டு குடிசை மாற்று வாரியம், ஜீவா நகர் பகுதியை தத்தெடுத்து ஓட்டு வீடுகள் கட்டுவதற்கு கடன் வழங்கியுள்ளது. இந்த நிலத்திற்கான கிரையத்தொகை மற்றும் குத்தகை தவணைத் தொகைகளை கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே. ஜீவா நகரில் இருக்கும் வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என அக்குடியிருப்புகளை சுற்றியுள்ள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் குடிசை மாற்று வாரியம், மாவட்ட ஆட்சியர், கோவை மாநகராட்சியை எதிர் மனுதாரராக சேர்த்துள்ளனர். 

இந்நிலையில், ஜீவா நகரில் வசிக்கும் 204 பேருக்கும் இருக்கின்ற இடத்தை கிரையம் செய்து கொடுக்க சட்டரீதியான நடவடிக்கையை குடிசை மாற்று வாரியம் எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும், தங்களை காலி செய்யக்கோரி மாநகராட்சி மற்றும் நகரமைப்பு துறையினர் வாய்மொழியாக மிரட்டுவதாக அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...