கோவை அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ் நடக்கும் திடீர் சினிமா படப்பிடிப்பு : போக்குவரத்து பாதிப்பு

கோவை: கோவை அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் புறத்தில் நடிகர் சிபிராஜின் நடிப்பில் வரவுள்ள திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றதால் மேம்பாலத்தைச் சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் புறத்தில் நடிகர் சிபிராஜின் நடிப்பில் வரவுள்ள திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றதால் மேம்பாலத்தைச் சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் நடிகர் சத்தியராஜின் மகன் சிபிராஜின் நடிப்பில் உருவாகவுள்ள படத்திற்கான படப்பிடிப்பு நேற்று இரவு நடைபெற்றது. பாலத்தின் கீழ் புறத்தில் திரைப்படத்திற்கான சூட்டிங் நடைபெறுவதையொட்டி பரபரப்பான சூழலில், வாகனங்களும் அதேபோல கூட்டம் கூட்டமாக மக்கள் நின்றதாலும் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



சுமார் ஒன்பது முப்பது மணி அளவில் தொடங்கிய இந்த படப்பிடிப்பால் சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் ஏதாவது அசம்பாவிதமா? என்று நினைத்து அந்தப் பகுதியில் வாகனத்தை நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

இதனால் மேம்பாலத்தைச் சுற்றியுள்ள பகுதியில் காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல அண்ணா சிலை அருகே கனரக வாகனங்களை நிறுத்தி வேறு பாதையில் திருப்பிவிட்டனர். எந்த முன்னறிவிப்புமின்றி திடீரென நடத்தப்பட்ட சினிமா படப்பிடிப்பால் உப்பிலிபாளையம் சிக்னல் அருகே உள்ள சுற்றுவட்டாரத்தில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...