கோவை: கோவை மத்திய சிறையில் உள்ள நன்னடத்தை சிறைவாசிகள் அவர்களின் குடும்பத்துடன் உண்டு மகிழ சிறைத்துறை சார்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
கோவை: கோவை மத்திய சிறையில் உள்ள நன்னடத்தை சிறைவாசிகள் அவர்களின் குடும்பத்துடன் உண்டு மகிழ சிறைத்துறை சார்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
கூடுதல் காவல் துறை இயக்குனர், சிறைத்துறை தலைவர் மற்றும் சிறைத்துறை துணைத் தலைவர் (கோவை சரகம்) ஆகியோரின் உத்தரவின்படி கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் முன்னிலையில் கோவை மத்திய சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் தண்டனை சிறைவாசிகளுக்கான சிறப்பு நேர்காணல் நேற்று நடைபெற்றது.

இவர்களில் நன்னடத்தையுடன் செயல்படும் 21 கைதிகளை சிறை நிர்வாகத்தினர் தேர்ந்தெடுத்து அவர்களை நேற்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உணவு உண்டு பேசி மகிழ சிறப்பு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட உறவினர்கள் கலந்து கொண்டு சிறையில் இருக்கும் தங்கள் உறவினர்களிடம் அன்பைச் செலுத்தினர்.
இதில், சிறையில் உள்ள உணவகத்தில் இருந்து உணவுப் பொருட்கள் போன்றவற்றை தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த சிறை வாசிக்கு வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியுடன் உறவாடினர்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கொடுத்த காவல்துறைக்கும், சிறைத்துறைக்கும் நன்னடத்தை சிறைவாசிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.