சோ-அவேர் தன்னார்வ அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் காய்கறி வியாபாரிகளாக மாறிய குழந்தைகள்

கோவை: 'சோ அவேர்' (So AWARE) என்கிற தன்னார்வ அமைப்பு ப்ரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் இன்று நடத்திய நிகழ்ச்சியில், 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு கிட்ஸ் மார்க்கெட்டை நடத்தினர்.


கோவை: 'சோ அவேர்' (So AWARE) என்கிற தன்னார்வ அமைப்பு ப்ரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் இன்று நடத்திய நிகழ்ச்சியில், 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு கிட்ஸ் மார்க்கெட்டை நடத்தினர்.



விவசாயம் தொடர்பான விழிப்புணர்வை குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சோ அவேர் அமைப்பினர் கிட்ஸ் மார்க்கெட்டை அமைத்தனர்.

இதில், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகளும் இதில் கலந்து கொண்டனர். 



இது குறித்து, சோ அவேர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "விவசாயத்தைக் காட்டிலும் தொழில் நுட்பங்களே இன்றைய காலகட்ட சிறார்களை சுற்றி இருக்கின்றன. காய்கறிகள் கூட ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்யப்படுகிறது. அப்போது தான் குழந்தைகள் அவற்றை பார்க்கின்றனர். ஆதலால், வேளாண்மை பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



"இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு விவசாயம், அறுவடை மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது." என்றார் கோவை வாசி ஒருவர்.

கிட்ஸ் மார்க்கெட்டில், விவசாயிகளுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தியவாறு விவசாயிகளுக்கு நன்றிகளை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி மூலம் திரட்டப்பட்ட நிதி பழங்குடியின மக்கள் வளர்ச்சிக்கு செலவிடப்படும் என்று கூறப்பட்டது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...