கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் தனித் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில், குமரகுரு கல்லூரியில் 'இன்க்ஹயிக்' என்ற நிகழ்ச்சி இன்று நடத்தப்படுகிறது.
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் தனித் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில், குமரகுரு கல்லூரியில் 'இன்க்ஹயிக்' என்ற நிகழ்ச்சி இன்று நடத்தப்படுகிறது.
குமரகுரு கல்லூரியில் இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சியில், மாணவர்களின் திறமைகளுக்கு ஏற்பட கதை எழுதுதல், நடனம், இசை, நகைச்சுவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், குமரகுரு கல்லூரி மாணவர்கள் மட்டும் இல்லாமல், வெளியில் இருந்து வரும் மாணவர்களும் பங்கேற்கலாம். இந்த நிகழ்ச்சியானது, தங்களது திறமைளை மாணவர்கள் வெளிக்கொணர நல்ல அடித்தளமாக அமையும்.
இது தொடர்பாக குமரகுரு கல்லூரியில் மெக்கானிக்கல் துறையில் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர் வியாஸ் லட்சுமணன் கூறுகையில், "குமரகுரு கல்லூரி இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்துகிறது. அதேவேளையில், வெளியே இருந்து பங்கேற்கும் மாணவர்களுக்கு தலா ரூ. 200 கட்டணமாக வசூலிக்கப்படும்," என்றார்.
குமரகுரு கல்லூரியில் இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சியில், மாணவர்களின் திறமைகளுக்கு ஏற்பட கதை எழுதுதல், நடனம், இசை, நகைச்சுவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், குமரகுரு கல்லூரி மாணவர்கள் மட்டும் இல்லாமல், வெளியில் இருந்து வரும் மாணவர்களும் பங்கேற்கலாம். இந்த நிகழ்ச்சியானது, தங்களது திறமைளை மாணவர்கள் வெளிக்கொணர நல்ல அடித்தளமாக அமையும்.
இது தொடர்பாக குமரகுரு கல்லூரியில் மெக்கானிக்கல் துறையில் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர் வியாஸ் லட்சுமணன் கூறுகையில், "குமரகுரு கல்லூரி இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்துகிறது. அதேவேளையில், வெளியே இருந்து பங்கேற்கும் மாணவர்களுக்கு தலா ரூ. 200 கட்டணமாக வசூலிக்கப்படும்," என்றார்.