குமரகுரு கல்லூரியில் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சி

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் தனித் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில், குமரகுரு கல்லூரியில் 'இன்க்ஹயிக்' என்ற நிகழ்ச்சி இன்று நடத்தப்படுகிறது.

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் தனித் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில், குமரகுரு கல்லூரியில் 'இன்க்ஹயிக்' என்ற நிகழ்ச்சி இன்று நடத்தப்படுகிறது. 

குமரகுரு கல்லூரியில் இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சியில், மாணவர்களின் திறமைகளுக்கு ஏற்பட கதை எழுதுதல், நடனம், இசை, நகைச்சுவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், குமரகுரு கல்லூரி மாணவர்கள் மட்டும் இல்லாமல், வெளியில் இருந்து வரும் மாணவர்களும் பங்கேற்கலாம். இந்த நிகழ்ச்சியானது, தங்களது திறமைளை மாணவர்கள் வெளிக்கொணர நல்ல அடித்தளமாக அமையும்.

இது தொடர்பாக குமரகுரு கல்லூரியில் மெக்கானிக்கல் துறையில் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர் வியாஸ் லட்சுமணன் கூறுகையில், "குமரகுரு கல்லூரி இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்துகிறது. அதேவேளையில், வெளியே இருந்து பங்கேற்கும் மாணவர்களுக்கு தலா ரூ. 200 கட்டணமாக வசூலிக்கப்படும்," என்றார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...