பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் : உயிரை மதிக்குமா மாநகராட்சி..?

கோவை: பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவு பணியில் ஈடுபடுவதற்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், பாதாள சாக்கடை இறப்புகளும், சுகாதாரமின்றி கைகளில் சாக்கடை வடிகால்களை சுத்தம் செய்யும் சம்பவங்களும் கோவை மாநகரில் தொடர்ந்து நடப்பது வேதனையளிப்பதாக உள்ளது.


கோவை: பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவு பணியில் ஈடுபடுவதற்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், பாதாள சாக்கடை இறப்புகளும், சுகாதாரமின்றி கைகளில் சாக்கடை வடிகால்களை சுத்தம் செய்யும் சம்பவங்களும் கோவை மாநகரில் தொடர்ந்து நடப்பது வேதனையளிப்பதாக உள்ளது.

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள கமலா மில் குட்டை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கிழக்கு மண்டலம், வார்டு எண் 64-க்கு உட்பட்ட இப்பகுதியில் சீரான வடிகால் வசதியில்லாததால், குடியிருப்புகளை சுற்றி கழிவுநீர் சூழ்ந்து இப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர்.



இப்பகுதியின், பிரதான சாலையை ஒட்டியுள்ள வடிகாலில் தற்போது அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. இதை சரிசெய்ய மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். ஆனால், பாதாள சாக்கடைக்குள் இறங்கி அடைப்பை சரிசெய்யும் துப்புரவு பணியாளர்களுக்கு உரிய உபகரணங்கள் ஏதும் வழங்கப்படாததால், உயிருக்கு ஆபத்தான நிலையில், சுகாதரமற்ற சூழலில் பணியாளர்கள் வேலைசெய்து வருகின்றனர்.

பாதாள சாக்கடைக்குள் இறங்குவதற்கும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவு பணியில் ஈடுபடுவதற்கும் அரசு தடை விதித்துள்ள நிலையில், மாநகராட்சி அதிகாரிகளே துப்புரவு பணியாளர்களை உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்ய நிர்பந்திப்பது சமூக ஆர்வலகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...