கோவை: பாரம்பரியத்துக்கு திரும்புவதோடு, உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்காத இயற்கை வேளாண் பொருள்கள் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட 'நம்ம ஊரு சந்தை', வடகோவை மேம்பாலம் அருகே உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வரும் 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
கோவை: பாரம்பரியத்துக்கு திரும்புவதோடு, உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்காத இயற்கை வேளாண் பொருள்கள் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட 'நம்ம ஊரு சந்தை', வடகோவை மேம்பாலம் அருகே உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வரும் 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
இயல்வாகை என்ற தன்னார்வ அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவையில் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து வருகின்றது. மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையில் இந்த சந்தை நடைபெறுகிறது. இதில், இயற்கை வழி விவசாய விளைபொருட்கள், தேன், சிறு தானிய தின்பண்டங்கள், மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள், மதிப்புக் கூட்டிய உணவுப் பொருட்கள், மர விளையாட்டு சாமான்கள் என இயற்கை சார்ந்த பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

நாளை (ஆக.,12) நடைபெறவிருக்கும் நம்ம ஊரு சந்தையில் "மழை நீர் சேகரிப்பு" என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் பவானியைச் சேர்ந்த இயற்கை சிவா விளக்கமளிக்கிறார். மேலும், இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் எழுதிய "உயிர்ச்சூழல் பண்ணை வடிவமைப்பு" புத்தக அறிமுக விழாவும் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவ அரங்கு, சிறார் அரங்கு, விவசாய அரங்கம் போன்ற அரங்கங்களின் கீழ் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
