கோவை வ.உ.சி., பூங்காவில் மாநகர காவல் ஆணையர் பெரியய்யா தலைமையில் தூய்மை பணி

கோவை: கோவை வ.உ.சி., மைதானம் மற்றும் பூங்காவில் லயன்ஸ் கிளப்புடன் கோவை மாநகர காவல்துறை இணைந்து தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.



கோவை: கோவை வ.உ.சி., மைதானம் மற்றும் பூங்காவில் லயன்ஸ் கிளப்புடன் கோவை மாநகர காவல்துறை இணைந்து தூய்மைப் பணியை மேற்கொண்டனர். 



கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா தலைமையில் நடைபெற்ற இந்த தூய்மை பணியில், காவல்துறையில் உள்ள போக்குவரத்து, குற்றம், சட்டம் ஒழுங்கு என அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த காவலர்களும் கலந்து கொண்டனர். 



மேலும், இந்த தூய்மை பணியில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அங்குள்ள குப்பைகளை அகற்றினர். 



இந்த நிகழ்ச்சியின் போது மாநகர காவல் ஆணையர் பெரியய்யா கூறியதாவது :- இந்த தூய்மைப் பணியானது சிறப்பான பணியாகும். இதற்கு பொது மக்களும், தன்னார்வலர்களும் சிறப்பான ஒத்துழைப்பு அளித்தனர். 



இத்தகைய தூய்மை பணிகள் வருங்காலங்களில் பொது இடங்களான கலைக் கல்லூரி, அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் சிறப்பாக செய்யப்படும். அதேபோல, வ.உ.சி., மைதான ஓரத்தில் வரும் வாரங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கான பணியும் நடைபெறும். பொதுமக்கள் தங்களுடைய இடத்தில் உள்ள அசுத்தங்களை அகற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், என்றார்.



இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) லட்சுமி உள்ளிட்ட பல்வேறு காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...