சென்னை : தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை சைதாப்பேட்டை விடுதலை செய்த நிலையில், அவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை சைதாப்பேட்டை விடுதலை செய்த நிலையில், அவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனி சென்ற திருமுருகன் காந்தி ஐ.நா. சபையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பேசினார். பின்னர், பல்வேறு நாடுகளுக்கு சென்று விட்டு நார்வேயில் இருந்து விமானம் மூலம் நேற்று அதிகாலை 3.45 மணிக்கு பெங்களூரு விமான நிலையம் வந்து இறங்கினார். அப்போது அவரை பெங்களூரு விமான நிலைய போலீசார் கைது செய்தனர். அரசுக்கு எதிராகப் பேசுவது, இந்தியாவிற்கு எதிராக வெளிநாட்டில் பேசுவது என்று வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும், மூன்று பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதியப்பட்டது.
பின்னர், பெங்களூரூவில் இருந்து தமிழக போலீசாரால் சென்னை அழைத்து வரப்பட்ட அவர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதி பிரகாஷ் தமிழக போலீசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன்..?, அவர் தேச விரோதமாக என்ன பேசினார் என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஏன் அவசரம் அவசரமாக திருமுருகன் காந்தியைக் கைது செய்தீர்கள்..?, பிரிவினை பேச்சு வீடியோவை ஏன் 64 நாட்களாகியும் தாக்கல் செய்யவில்லை என்று சாரமாரியாக நீதிபதி பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், போலீஸ் அவரை சிறையில் அடைக்க அனுமதி கோரி இருந்தது. ஆனால், திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப முடியாது. அதேபோல், போலீஸ் காவலில் அனுப்பவும் முடியாது. தேவையானால் 24 மணி நேரத்திற்குள் அவரை விசாரிக்கலாம் என நீதிபதி கூறினார். நீதிமன்றத்தின் தீர்ப்பால் விடுதலையான திருமுருகன் காந்தி, வெளியே வந்த போது போலீசார் மீண்டும் கைது செய்தனர். அப்போது, அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்து திருமுருகன் காந்தியை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ஜெர்மனி சென்ற திருமுருகன் காந்தி ஐ.நா. சபையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பேசினார். பின்னர், பல்வேறு நாடுகளுக்கு சென்று விட்டு நார்வேயில் இருந்து விமானம் மூலம் நேற்று அதிகாலை 3.45 மணிக்கு பெங்களூரு விமான நிலையம் வந்து இறங்கினார். அப்போது அவரை பெங்களூரு விமான நிலைய போலீசார் கைது செய்தனர். அரசுக்கு எதிராகப் பேசுவது, இந்தியாவிற்கு எதிராக வெளிநாட்டில் பேசுவது என்று வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும், மூன்று பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதியப்பட்டது.
பின்னர், பெங்களூரூவில் இருந்து தமிழக போலீசாரால் சென்னை அழைத்து வரப்பட்ட அவர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதி பிரகாஷ் தமிழக போலீசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன்..?, அவர் தேச விரோதமாக என்ன பேசினார் என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஏன் அவசரம் அவசரமாக திருமுருகன் காந்தியைக் கைது செய்தீர்கள்..?, பிரிவினை பேச்சு வீடியோவை ஏன் 64 நாட்களாகியும் தாக்கல் செய்யவில்லை என்று சாரமாரியாக நீதிபதி பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், போலீஸ் அவரை சிறையில் அடைக்க அனுமதி கோரி இருந்தது. ஆனால், திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப முடியாது. அதேபோல், போலீஸ் காவலில் அனுப்பவும் முடியாது. தேவையானால் 24 மணி நேரத்திற்குள் அவரை விசாரிக்கலாம் என நீதிபதி கூறினார். நீதிமன்றத்தின் தீர்ப்பால் விடுதலையான திருமுருகன் காந்தி, வெளியே வந்த போது போலீசார் மீண்டும் கைது செய்தனர். அப்போது, அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்து திருமுருகன் காந்தியை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.