நீலகிரி : கோத்தகிரி அருகே கட்டுமான பணிக்காக ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
நீலகிரி : கோத்தகிரி அருகே கட்டுமான பணிக்காக ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோத்தகிரியில் இருந்து கன்னேரிமுக்கு பகுதியில் கட்டுமானப் பணிகளுக்காக சிறிய டெம்போ மூலம் பணியாட்களை ஏற்றி சென்றுள்ளனர். கன்னேரிமுக்கு செல்லும் 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வாகனம் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த 10 பேரும் படுகாயங்களுடன் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக 2 பேரை உதகை தலைமை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக் கூடாது என்ற விதிமுறைகளை மீறி, நீலகிரி மாவட்ட கிராமப் புறங்களில் தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களில் பணிபுரிய சரக்கு வாகனங்களிலேயே ஆட்களை ஏற்றிச் செல்வது வாடிக்கையாக உள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் ஏற்பட்டு மனித உயிர் பலி ஏற்படுவதற்கு முன் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

கோத்தகிரியில் இருந்து கன்னேரிமுக்கு பகுதியில் கட்டுமானப் பணிகளுக்காக சிறிய டெம்போ மூலம் பணியாட்களை ஏற்றி சென்றுள்ளனர். கன்னேரிமுக்கு செல்லும் 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வாகனம் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த 10 பேரும் படுகாயங்களுடன் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக 2 பேரை உதகை தலைமை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக் கூடாது என்ற விதிமுறைகளை மீறி, நீலகிரி மாவட்ட கிராமப் புறங்களில் தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களில் பணிபுரிய சரக்கு வாகனங்களிலேயே ஆட்களை ஏற்றிச் செல்வது வாடிக்கையாக உள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் ஏற்பட்டு மனித உயிர் பலி ஏற்படுவதற்கு முன் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.