கோவையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு கருணாநிதிக்கு மவுன அஞ்சலி

கோவை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்தினர்.


கோவை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்தினர். 



கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியானது, கோவை காந்திபுரம் அண்ணா சிலையிலிருந்து, வி.கே.கே மேனன் சாலை வழியாக வந்து சித்தாப்புதூரில் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.



இந்நிகழ்ச்சியில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார், ம.தி.மு.க., சார்பில் மோகன்குமார், த.பெ.தி.க., பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், கொ.ம.தே.க., ஆதி தமிழர் பேரவை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 



இதேபோல, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் படத்திற்கு கோவை மாவட்ட பார் கவுன்சில் சார்பில் அவரது படத்திற்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்ட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். 



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...