சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்பட 1,199 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு வரும் நவம்பர் மாதம் 11-ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்பட 1,199 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு வரும் நவம்பர் மாதம் 11-ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதில், குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு உடன் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பிரிவு என தனித்தனியே தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், 1,199 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு வரும் நவம்பர் 11-ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது. மேலும், குரூப் 2 தேர்வுக்கு இன்று முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சார் பதிவாளர், நகராட்சி ஆணையர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக தேர்வு நடத்தப்படுகிறது. குரூப் 2 தேர்வு தொடர்பான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதில், குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு உடன் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பிரிவு என தனித்தனியே தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், 1,199 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு வரும் நவம்பர் 11-ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது. மேலும், குரூப் 2 தேர்வுக்கு இன்று முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சார் பதிவாளர், நகராட்சி ஆணையர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக தேர்வு நடத்தப்படுகிறது. குரூப் 2 தேர்வு தொடர்பான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.