கோவையில் நாளை நடக்கிறது பள்ளி மாணவர்களுக்கான வினாடி - வினா போட்டி

கோவை: கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஒருநாள் வினாடி - வினா போட்டி சுகுணா பி.ஐ.பி., பள்ளியில் நாளை (ஆக.,11) நடக்கிறது.

கோவை:  கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஒருநாள் வினாடி - வினா போட்டி சுகுணா பி.ஐ.பி., பள்ளியில் நாளை (ஆக.,11) நடக்கிறது. 

ஐ.ஐ.டி., மெட்ராஸ் சார்பில் சார்பில் நாடு முழுவதும் முக்கிய 20 நகரங்களில் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள சுகுணா பி.ஐ.பி., பள்ளியில் ஒருநாள் வினாடி - வினா போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள், அணிக்கு 2 பேர் என்ற அடிப்படையில் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், போட்டிகள் அறிவியல், பொதுஅறிவு மற்றும் கணிதம் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்படும். மாணவர்கள் கட்டாயம் பள்ளியின் அடையாள அட்டைக் கொண்டு வரவேண்டும். ஒரு அணியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இருவரும் வெவ்வேறு பள்ளியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். போட்டியாளர்கள் 9 மணிக்கு முன்னதாக நிகழ்வரங்கிற்கு வரவேண்டும். 10 மணிக்கு போட்டிகள் ஆரம்பிக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கடந்த முறை நடைபெற்ற வினாடி - வினா போட்டியில் 150-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். தற்போது, போட்டியாளர்களுக்கு வசதியாக ஆன்லைன் முன்பதிவு மற்றும் போட்டி நடக்கும் அரங்கில் பதிவு செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த முறையும் அதிகளவிலான போட்டியாளர்கள் பங்கேற்பாளர்கள் என நம்புகிறோம்," என்றார் போட்டி ஒருங்கிணைப்பாளர் பி. அஸ்வத் ஹரி.

இந்தப் போட்டியில் முதல் 5 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறும். மொத்தமாக 3 அணிகள் ஐ.ஐ.டி., மெட்ராஸில் நடக்கும் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். வெற்றி பெறும் அணிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...