வரும் 14-ம் தேதி கூடுகிறது தி.மு.க., செயற்குழு : மறைந்த கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்க ஏற்பாடு

மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியிக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக தி.மு.க., செயற்குழு கூட்டம் வரும் 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.


மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியிக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக தி.மு.க., செயற்குழு கூட்டம் வரும் 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.



இது தொடர்பாக தி.மு.க., பொதுச்செயலாளர் க அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- தி.மு.க., செயற்குழு கூட்டம் வரும் 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும். அன்றைய தினம் காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மு.க., ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் தி.மு.க., செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கூட்டத்தில் மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட இருக்கிறது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. என்றும் 

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இது என்பதால், இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகனை அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, ராஜா, துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர், திமுக.,வின் அவசர செயற்குழு பற்றிய செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஸ்டாலின், "மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கவே அவசர செயற்குழு கூட்டம் கூட்டப்படுகிறது. கருணாநிதி நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்தவும், பார்வையாளர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது," என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...