கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் சமாதிகளுக்கு சிக்கல்..! : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக கோவையில் டிராபிக் ராமசாமி பேட்டி

கோவை: மெரினாவில் உள்ள கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் சமாதிகளை அகற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகக் கோவையில் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.


கோவை:  மெரினாவில் உள்ள கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் சமாதிகளை அகற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகக் கோவையில் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு அளித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- மேட்டுப்பாளையம் திம்மனூர் பகுதியில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன். ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்யக் காத்திருக்கிறார்கள். அரசியல்வாதிகள் தான் அதனை பயன்படுத்திக் கொள்வதில்லை. பொதுமக்கள் குறைகளை அரசியல்வாதிகளிடம் கூறாமல் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். 



தி.மு.க., வழக்கு இருந்திருந்தால் மெரினாவில் இன்று கருணாநிதி சமாதி அங்கு அமைத்து இருக்க முடியாது. எனது வழக்கை வாபஸ் வாங்கக் கோரி, எனது வழக்கறிஞரைப் பொறுப்பு நீதியரசர் மிரட்டினார். வாபஸ் வாங்காத காரணத்தால் தான் எனது வழக்கை தள்ளுபடி செய்து விட்டார். ஒரு ஆண்டிற்கு மேலாக நடைபெற்ற வழக்கை தள்ளுபடி செய்ததின் மூலம் பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் மீது நல்ல அபிப்ராயம் இல்லை. 

இந்த வழக்கை வாபஸ் வாங்கக் கோரி தி.மு.க.,வினர் என்னையும் எனது வழக்கறிஞரையும் மிரட்டினர். மேலும், மெரினாவில் சமாதி அமைக்க கூடாது என பொதுநல வழக்கு தொடுத்தவர்கள் ஏன் வாபஸ் பெற வேண்டும். மெரினாவில் அமைந்துள்ள சமாதிகளை எடுப்பது தொடர்பான தனது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த உத்தரவு நகல் வந்தவுடன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளேன், என்றார். 



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...