கோவை : குனியமுத்தூர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில், பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இரண்டு சிறுமிகள் உள்பட 3 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை: குனியமுத்தூர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில், பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இரண்டு சிறுமிகள் உள்பட 3 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குனியமுத்தூர் காமராஜர் வீதி அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (45). இவருக்கு சசிகலா (36) என்ற மனைவியும், சினேகா (17) மற்றும் பிரேமவர்ணா (13) ஆகியோர் உள்ளனர். இவர்கள் நேற்று இரவு விஷம் அருந்தி மயங்கிய நிலையில் வீட்டில் இருந்தனர். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். நேற்றிரவு முதல் நால்வருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேல்சிகிச்சைக்காக ஜானகிராமனின் மனைவி சசிகலா மட்டும் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அங்கு சசிகலா சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மற்ற மூன்று பேரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே, இவர்கள் எதற்காக தற்கொலைக்கு முயன்றனர்..? கடன் தொல்லைகள் ஏதாவது உள்ளதா..? என்ற கோணத்தில் குனியமுத்தூர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
குனியமுத்தூர் காமராஜர் வீதி அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (45). இவருக்கு சசிகலா (36) என்ற மனைவியும், சினேகா (17) மற்றும் பிரேமவர்ணா (13) ஆகியோர் உள்ளனர். இவர்கள் நேற்று இரவு விஷம் அருந்தி மயங்கிய நிலையில் வீட்டில் இருந்தனர். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். நேற்றிரவு முதல் நால்வருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேல்சிகிச்சைக்காக ஜானகிராமனின் மனைவி சசிகலா மட்டும் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அங்கு சசிகலா சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மற்ற மூன்று பேரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே, இவர்கள் எதற்காக தற்கொலைக்கு முயன்றனர்..? கடன் தொல்லைகள் ஏதாவது உள்ளதா..? என்ற கோணத்தில் குனியமுத்தூர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.