கோவை: தனிச்சுவைமிக்க உணவுகள் இடம்பெறும் 'கோர்மெட் பசார்' உணவுக் கண்காட்சி கோவையில் நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது.
கோவை: தனிச்சுவைமிக்க உணவுகள் இடம்பெறும் 'கோர்மெட் பசார்' உணவுக் கண்காட்சி கோவையில் நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது.
உப்பிலி பாளையம் பெர்க்ஸ் பள்ளியின் அருகே உள்ள விஸ்பரிங் ஸ்டோன்ஸ் என்ற அரங்கில் 4-வது கோர்மெட் பசார்' உணவுக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில், அனுபவமிக்க வீட்டு சமையலர்கள், சமையற் கலைஞர்கள் மற்றம் கோவையைச் சேர்ந்த சிறந்த கஃபேக்களால் தயாரிக்கப்பட்ட கேக்குகள், இனிப்புகள், மாவு இனிப்பு பொருட்கள் மற்றும் சாக்லெட் போன்ற வகையிலான இனிப்புகள் இடம்பெறுகின்றன.
இதில், கோவை, சென்னை, நாக்பூர், பெங்களூரூ, கேரளா, கொடைக்கானல், கோத்தகிரி மற்றும் உதகை போன்ற பகுதிகளில் இருந்தும் சேர்ந்து 65 அரங்குகளை அமைக்கின்றனர். கண்காட்சியில் ஆடை அலங்காரப் பொருட்களும் இடம் பெறுகின்றன. அதேபோல, முதல்முறையாக விவசாய சந்தையும் காட்சிப்படுத்தப்படுகிறது. மேலும், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பிரத்யேகப் புகைப்பட பகுதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
நாளை (ஆக.,09) மற்றும் நாளை மறுநாள் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியானது நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் உண்டு. மேலும், தொடர்புக்கு பிரேமா கோயின்கா 9345787850 மற்றும் கனிகா கண்ணா 8220999933 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.
உப்பிலி பாளையம் பெர்க்ஸ் பள்ளியின் அருகே உள்ள விஸ்பரிங் ஸ்டோன்ஸ் என்ற அரங்கில் 4-வது கோர்மெட் பசார்' உணவுக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில், அனுபவமிக்க வீட்டு சமையலர்கள், சமையற் கலைஞர்கள் மற்றம் கோவையைச் சேர்ந்த சிறந்த கஃபேக்களால் தயாரிக்கப்பட்ட கேக்குகள், இனிப்புகள், மாவு இனிப்பு பொருட்கள் மற்றும் சாக்லெட் போன்ற வகையிலான இனிப்புகள் இடம்பெறுகின்றன.
இதில், கோவை, சென்னை, நாக்பூர், பெங்களூரூ, கேரளா, கொடைக்கானல், கோத்தகிரி மற்றும் உதகை போன்ற பகுதிகளில் இருந்தும் சேர்ந்து 65 அரங்குகளை அமைக்கின்றனர். கண்காட்சியில் ஆடை அலங்காரப் பொருட்களும் இடம் பெறுகின்றன. அதேபோல, முதல்முறையாக விவசாய சந்தையும் காட்சிப்படுத்தப்படுகிறது. மேலும், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பிரத்யேகப் புகைப்பட பகுதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
நாளை (ஆக.,09) மற்றும் நாளை மறுநாள் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியானது நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் உண்டு. மேலும், தொடர்புக்கு பிரேமா கோயின்கா 9345787850 மற்றும் கனிகா கண்ணா 8220999933 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.