Exclusive: லாலி ரோடு ஜங்சனில் விரைவில் வருகிறது மேம்பாலம் ; டெண்டருக்கு சமர்ப்பிக்க 23-ம் தேதி கடைசி நாள்

கோவை : லாலி ரோடு ஜங்சனில் மேம்பாலம் அமைப்பதற்கான மதிப்பீடு செய்ய விண்ணப்பங்களை பெற்றவர்கள் 23-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.


கோவை : லாலி ரோடு ஜங்சனில் மேம்பாலம் அமைப்பதற்கான மதிப்பீடு செய்ய விண்ணப்பங்களை பெற்றவர்கள் 23-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. 

லாலி ரோடு ஜங்சனில் பிரியும் நான்கு சாலைகள் மார்க்கமாக காந்திபார்க், தடாகம், வடகோவை மற்றும் வடவள்ளி போன்ற பகுதிகளுக்கும், அங்கிருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல முடியும். வடவள்ளி மற்றும் தடாகம் போன்ற பகுதி வாழ் மக்கள், நகரப்பகுதிக்குள் நுழைவதற்கு இந்த சாலையையே பிரதான சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.



கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் போன்ற கல்லூரிகள் அமைந்துள்ள இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், லாலி ரோடு ஜங்சனில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பரிந்துரை

மாவட்ட ஆட்சியர்கள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், இந்த மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை பரிந்துரைக்கப்பட்டது. கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர் பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும்., பாலம் அமைப்பதற்காக தனியாரிடம் இருந்து டெண்டர் பெறவும் உத்தரவிட்டார்.



டெண்டர்

இதனடிப்படையில், மாநில நெடுஞ்சாலை துறை (கோவை) சார்பில் முதல்கட்டமாக மேம்பாலம் கட்ட மதிப்பீடு செய்யும் பணிகளுக்கு டெண்டர் கோரியுள்ளது. டெண்டரை வரும் 23-ம் தேதி மதியம் 3 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெண்டரில், பாலத்தின் மாதிரி வரைபடம், பாலம் அமைப்பதற்கான மொத்த தொகை மற்றும் பாலத்தின் நீள-அகலங்கள் மற்றும் போன்றவை இடம்பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "லாலி ரோடு ஜங்சனில் மேம்பாலம் அமைக்க ஆகும் மதிப்பீடு மற்றும் அளவு குறித்து ஆய்வு செய்து சமர்ப்பிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதன் பிறகு தான் மேம்பாலம் அமைக்க ஆகும் செலவு குறித்து கூற முடியும். தகுதியான டெண்டர் முடிவு செய்தவுடனே பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும்." என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...