நீலகிரி: முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதி காலமானதை தொடர்ந்து, அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரண்டாவது நாளாக இன்றும் உதகை உழவர் சந்தை மூடப்பட்டுள்ளது.
நீலகிரி: முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதி காலமானதை தொடர்ந்து, அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரண்டாவது நாளாக இன்றும் உதகை உழவர் சந்தை மூடப்பட்டுள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியால் உதகையில் உழவர் சந்தை தொடங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து நேற்று அரசு சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் உதகை நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில் விவசாயிகளும், பொது மக்களும் பயன் பெறும் வகையில் உழவர் சந்தையை உருவாக்கிய கருணாநிதிக்கு இன்று உதகை உழவர் சந்தையில் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், இன்றும் உழவர் சந்தையில் உள்ள கடைகளை அடைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


கடந்த 2000-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியால் உதகையில் உழவர் சந்தை தொடங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து நேற்று அரசு சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் உதகை நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில் விவசாயிகளும், பொது மக்களும் பயன் பெறும் வகையில் உழவர் சந்தையை உருவாக்கிய கருணாநிதிக்கு இன்று உதகை உழவர் சந்தையில் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், இன்றும் உழவர் சந்தையில் உள்ள கடைகளை அடைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
