திருப்பூர்: உடுமலை அமாரவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திருப்பூர்: உடுமலை அமாரவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது தற்போது அணையில் 87.90 அடி நீா் இருப்பு உள்ளது. அணைக்கு பாம்பாறு மற்றும் சின்னாறு வழியாக வினாடிக்கு 2,869 கன அடி நீா்வரத்து வந்து கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு மற்றும் முழு கொள்ளளவை எட்டியதன் காரணமாக அமராவதி ஆற்றில் வினாடிக்கு 1,846 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் மூணாறு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், உபரியாக வரும் நீா்வரத்தை அமராவதி ஆற்றில் திறந்து விடும் வாய்ப்புள்ளது.
இதனால், கல்லாபுரம், மடத்துக்குளம், தாராபுரம், சின்னதாராபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கரையோர பகுதி மக்களுக்கு திருப்பூா் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கரையோர பகுதி மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மடத்துக்குளம் மற்றும் தாராபும் பகுதியில் சுமார் 54,846 ஏக்கர் நிலங்கள் நெல் பயிரிடப்பட்டு நடவு பணி துவங்க இருக்கும் நிலையில் அணைக்கு தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூா் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது தற்போது அணையில் 87.90 அடி நீா் இருப்பு உள்ளது. அணைக்கு பாம்பாறு மற்றும் சின்னாறு வழியாக வினாடிக்கு 2,869 கன அடி நீா்வரத்து வந்து கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு மற்றும் முழு கொள்ளளவை எட்டியதன் காரணமாக அமராவதி ஆற்றில் வினாடிக்கு 1,846 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் மூணாறு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், உபரியாக வரும் நீா்வரத்தை அமராவதி ஆற்றில் திறந்து விடும் வாய்ப்புள்ளது.
இதனால், கல்லாபுரம், மடத்துக்குளம், தாராபுரம், சின்னதாராபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கரையோர பகுதி மக்களுக்கு திருப்பூா் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கரையோர பகுதி மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மடத்துக்குளம் மற்றும் தாராபும் பகுதியில் சுமார் 54,846 ஏக்கர் நிலங்கள் நெல் பயிரிடப்பட்டு நடவு பணி துவங்க இருக்கும் நிலையில் அணைக்கு தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.