கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை: வேளாண் பல்கலை., தகவல்

கோவை: கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் எனவும், தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பெய்து வருவதாகவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் எனவும், தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பெய்து வருவதாகவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "தென்மேற்கு பருவமழையானது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் முடிவடையும். அவ்வாறு ஜூன் மாதம் தொடங்கிய மழை மூலம், அம்மாதம் 43 மி.மீ கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் 54 மி.மீ பெய்துள்ளது. ஜூலை மாதம் 68.5 மி.மீ எதிர்பார்த்த நிலையில் 73.5 மி.மீ மழை பெய்துள்ளது. 

அதே போல் ஆகஸ்ட் மாதம் 31 மி.மீ வரை மழை எதிர்பார்க்கப்படுகிறது தற்போது வரை 10 மி.மீ மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை 209 மி.மீ வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை 137 மி.மீ வரை பெய்துள்ளது.

கோவையைப் பொறுத்தவரையில் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நேற்று கோவை மாவட்டம் சின்ன கல்லாறு பகுதியில் 120 மி.மீ, வால்பாறையில் 100 மி.மீ, பொள்ளாச்சியில் 20 மி.மீ மழை பெய்துள்ளது.

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் பகுதியில் 70 மி.மீ, ஊட்டியில் 10 மி.மீ மலை மழை நேற்று பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கோவையில் காற்றின் வேகம் 12 முதல் 14 கிலோ மீட்டர் வேகம் வரை வீச வாய்ப்புள்ளது. கடந்த இரு தினங்களாக 17 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வந்தது. காலை நேர வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸ், இரவு நேர வெப்ப நிலை 23 முதல் 24.5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது." என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...