சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிக்கும் ராஜாஜி ஹாலுக்கு சற்று சற்று நேரத்திற்கு முன்பு கவிஞர் வைரமுத்து வந்தார். அவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பேழை அருகே சென்றதும், உணர்ச்சி மிகுதியால் கதறி அழுதார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிக்கும் ராஜாஜி ஹாலுக்கு சற்று சற்று நேரத்திற்கு முன்பு கவிஞர் வைரமுத்து வந்தார். அவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பேழை அருகே சென்றதும், உணர்ச்சி மிகுதியால் கதறி அழுதார்.
கண்ணாடி பேழை அருகே மண்டியிட்டு அழுத வைரமுத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒருவரின் மறைவு என்பது இயற்கை என்று சிலர் கருதலாம். பெரியார் மறைவின் போது கருணாநிதி ஒரு கடிதத்தை எழுதினர். அதில், "தாஜ்மகாலுக்கு வயதாகிவிட்டது என்ற காரணத்தால் அது பூமிக்குள் புதைந்து போனால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அது போலத்தான் பெரியாரும்." என்று குறிப்பிட்டிருந்தார்.
தற்போது அவரது மறைவையும் அதே போலத்தான். அவரது மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தலைவர் என்பதன் நிமிர்ந்த நோக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அவர். மாபெரும் கட்சியை 5௦ ஆண்டு காலம் வழிநடத்திய பெருமையை அவர் பெற்றுள்ளார். இசைக்குடும்பத்தில் பிறந்த அவர் முத்தமிழுக்கும் பெருமை சேர்த்தார்.
போராளியாய் பிறப்பவர் படைப்பாளியாய் ஆவதில்லை. படைப்பாளி போராளியாவதில்லை. ஆனால், படைப்பாளியாகவும், போராளியாகவும், அரசனாகவும் இருந்தவர் தற்போது தேசியக்கொடி போர்த்தப்பட்டு கிடக்கிறார்." என்ற கூறி கண்ணீர் வடித்தார்.
மேலும், "35 ஆண்டுகளாக தினமும் எங்களுக்குள் காலை வேளையில் இருந்த உரையாடல் முடிந்துவிட்டது. அவர் எழுதிய புத்தகங்களை அடுக்கி வைத்தால் அவரை விட உயரமாக இருக்கும். கலைஞர் என்ற நான்கு எழுத்துக்குள் ஒரு நூற்றாண்டை அடக்கிவிட முடியும்." என்றார்.
கண்ணாடி பேழை அருகே மண்டியிட்டு அழுத வைரமுத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒருவரின் மறைவு என்பது இயற்கை என்று சிலர் கருதலாம். பெரியார் மறைவின் போது கருணாநிதி ஒரு கடிதத்தை எழுதினர். அதில், "தாஜ்மகாலுக்கு வயதாகிவிட்டது என்ற காரணத்தால் அது பூமிக்குள் புதைந்து போனால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அது போலத்தான் பெரியாரும்." என்று குறிப்பிட்டிருந்தார்.
தற்போது அவரது மறைவையும் அதே போலத்தான். அவரது மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தலைவர் என்பதன் நிமிர்ந்த நோக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அவர். மாபெரும் கட்சியை 5௦ ஆண்டு காலம் வழிநடத்திய பெருமையை அவர் பெற்றுள்ளார். இசைக்குடும்பத்தில் பிறந்த அவர் முத்தமிழுக்கும் பெருமை சேர்த்தார்.
போராளியாய் பிறப்பவர் படைப்பாளியாய் ஆவதில்லை. படைப்பாளி போராளியாவதில்லை. ஆனால், படைப்பாளியாகவும், போராளியாகவும், அரசனாகவும் இருந்தவர் தற்போது தேசியக்கொடி போர்த்தப்பட்டு கிடக்கிறார்." என்ற கூறி கண்ணீர் வடித்தார்.
மேலும், "35 ஆண்டுகளாக தினமும் எங்களுக்குள் காலை வேளையில் இருந்த உரையாடல் முடிந்துவிட்டது. அவர் எழுதிய புத்தகங்களை அடுக்கி வைத்தால் அவரை விட உயரமாக இருக்கும். கலைஞர் என்ற நான்கு எழுத்துக்குள் ஒரு நூற்றாண்டை அடக்கிவிட முடியும்." என்றார்.