பொதுமக்களின் அஞ்சலிக்காக கருணாநிதியின் உடல் : ராஜாஜி அரங்கிற்கு வந்த டி.டி.வி., தினகரன்

சென்னை: உடல்நலக்குறைவால் காலமான தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த டி.டி.வி., தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்., ராஜாஜி அரங்கிற்கு வந்தனர்.


சென்னை: உடல்நலக்குறைவால் காலமான தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த டி.டி.வி., தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்., ராஜாஜி அரங்கிற்கு வந்தனர்.



10 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு, காவேரி மருத்துவமனையில் உயிரிழந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் தொண்டர்களின் கூட்ட வெள்ளத்தில் கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, நள்ளிரவு 1 மணி வரை உறவினர்கள் மற்றும் குடும்பத்தாரின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நடிகர் ரஜினிகாந்த் உள்பட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். 

இதைத் தொடர்ந்து, தொண்டர்கள் புடைசூழ கருணாநிதியின் உடல் சி.ஐ.டி., காலனியில் உள்ள கனிமொழியின் இல்லத்திற்கு அஞ்சலிக்காகக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு திரையுலகப் பிரபலங்கள் ஒய்.ஜி. மகேந்திரன், மயில்சாமி மற்றும் விஷ்ணு உள்பட ஏராளமானத் தொண்டர்கள் அதிகாலை 3 மணி வரை அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து எடுத்துவரப்பட்ட கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தயாராக இருக்கின்றனர். இந்த நிலையில், கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த டி.டி.வி., தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்., ராஜாஜி அரங்கிற்கு வந்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...