கோவை: கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் 1,075 டவுன் மற்றும் மப்சல் பேருந்துகள் தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் 1,075 டவுன் மற்றும் மப்சல் பேருந்துகள் தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மண்டல பொது மேலாளர் கோவிந்தராஜ் கூறுகையில், "கோவை மாநகர் பகுதியில் இயக்கப்பட்டு வரும் அனைத்து டவுன் மற்றும் மப்சல் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. நாளை, காலையும் பேருந்துகள் இயங்காது. சூழ்நிலையை பொறுத்தே பேருந்துகள் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
இதேபோல, கோவை திருவள்ளுவர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் 120-க்கு மேற்பட்ட பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.