கருணாநிதியின் உடல் அதிகாலை 4 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க ஏற்பாடு

சென்னை: மறைந்த கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில் நாளை அதிகாலை 4 மணி முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: மறைந்த கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில் நாளை அதிகாலை 4 மணி முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



சுவாசக் கோளாறு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த 11 நாட்களாகக் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமானார். இதனால், தொண்டர்கள் சென்னை காவேரி மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர். 

இந்த நிலையில், தி.மு.க., தலைமையகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோபாலபுரத்தில் இன்று இரவு 8.30 மணி முதல் 1 மணி வரை கருணாநிதியின் உடலுக்குக் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 3 மணி வரை சி.ஐ.டி., காலனியில் இறுதிச்சடங்கு செய்யப்பட இருக்கிறது. பின்னர், அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் அஞ்சலிக்கு வைக்கப்படும்.

மேலும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, மாநிலம் முழுவதும் உள்ள கட்சி அலுவலகங்களில் கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும், இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...