சென்னை: உடல்நலக்குறைவால் காலமான தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை: உடல்நலக்குறைவால் காலமான தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நாட்டின் மிகப்பெரும் தலைவர்களுள் ஒருவர் கருணாநிதி. சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், மக்கள் விரும்பும் தலைவராக திகழ்ந்தவர். அவரது மறைவை கேட்டு துயரத்தில் ஆழ்ந்தேன்", என பதிவிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் (தமிழில்): திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன், இவ்வாறு கூறியுள்ளார்.
குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு: இந்தியாவின் மிக மூத்த அரசியல் ஆளுமையான கருணாநிதியின் மறைவால் துயரம் அடைந்தேன். என்றார்.
முதலமைச்சர் பழனிசாமி: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும், எனக் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த்: என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத கருப்பு நாள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராமதாஸ் (பா.ம.க.,) : அன்பு நண்பர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மறைவு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும், துயரத்தையும் அளிக்கிறது. கலைஞரின் மறைவு தமிழக அரசியலுக்கும், கலை உலகுக்கும் உண்மையாகவே ஈடு செய்ய முடியாத இழப்பு. கண்ணீருடன் நான், எனக் கூறியுள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி: இந்தியா தனது மகனை இழந்து விட்டது, என்றார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நாட்டின் மிகப்பெரும் தலைவர்களுள் ஒருவர் கருணாநிதி. சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், மக்கள் விரும்பும் தலைவராக திகழ்ந்தவர். அவரது மறைவை கேட்டு துயரத்தில் ஆழ்ந்தேன்", என பதிவிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் (தமிழில்): திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன், இவ்வாறு கூறியுள்ளார்.
குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு: இந்தியாவின் மிக மூத்த அரசியல் ஆளுமையான கருணாநிதியின் மறைவால் துயரம் அடைந்தேன். என்றார்.
முதலமைச்சர் பழனிசாமி: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும், எனக் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த்: என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத கருப்பு நாள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராமதாஸ் (பா.ம.க.,) : அன்பு நண்பர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மறைவு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும், துயரத்தையும் அளிக்கிறது. கலைஞரின் மறைவு தமிழக அரசியலுக்கும், கலை உலகுக்கும் உண்மையாகவே ஈடு செய்ய முடியாத இழப்பு. கண்ணீருடன் நான், எனக் கூறியுள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி: இந்தியா தனது மகனை இழந்து விட்டது, என்றார்.