கோவை: உடல்நலக்குறைவால் தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமான நிலையில், கோவையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை: உடல்நலக்குறைவால் தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமான நிலையில், கோவையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாகவும், சீரற்ற நிலையிலும் உள்ளது என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது- மருத்துவமனை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்கத் தமிழக அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் என அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. கோவையைப் பொறுத்தவரையில், ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், துடியலூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் இன்று மாலை முதலே அடைக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, பதற்றமான சூழல் நிலவி வருவதால், பேருந்துகள் உள்ளிட்ட பொதுமக்களின் சேவை வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாகவும், சீரற்ற நிலையிலும் உள்ளது என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது- மருத்துவமனை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்கத் தமிழக அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் என அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. கோவையைப் பொறுத்தவரையில், ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், துடியலூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் இன்று மாலை முதலே அடைக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, பதற்றமான சூழல் நிலவி வருவதால், பேருந்துகள் உள்ளிட்ட பொதுமக்களின் சேவை வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
