தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவால் தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை

வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமானதால், தமிழகத்தில் நாளை (ஆக.,08) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமானதால், தமிழகத்தில் நாளை (ஆக.,08) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

சுவாசக் கோளாறு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த 11 நாட்களாகக் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமானார். இதனால், தொண்டர்கள் சென்னை காவேரி மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் தி.மு.க., தொண்டர்கள் கனத்த இதயத்துடன் அதிர்ச்சியில் இருப்பதால், பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. எனவே, சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இதனிடையே, கருணாநிதியின் மறைவிற்கு, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், 5 முறை முதலமைச்சரும், தற்போது எதிர்கட்சித் தலைவராகவும் இருந்த கருணாநிதியின் மறைவையொட்டி, தமிழக அரசின் சார்பில் நாளை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 நாட்கள் துக்கம் அனுசரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல, கருணாநிதியின் மறைவையொட்டி, புதுச்சேரியில் மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...