ராஜநாகத்தை துன்புறுத்தி செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட 5 பேர் கைது

நீலகிரி: கூடலூர் அருகே ராஜநாகத்தை துன்புறுத்தி செல்ஃபி எடுத்த 5 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

நீலகிரி: கூடலூர் அருகே ராஜநாகத்தை துன்புறுத்தி செல்ஃபி எடுத்த 5 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 

கடந்த 4-ம் தேதி சேரம்பாடி பசாரை ஒட்டிய கன்னம்பையல் சாலையில் மரத்தில் ராஜநாகம் ஒன்று இருந்துள்ளது. இதைக் கண்ட சிலர், அதனைப் பிடித்து துன்புறுத்தி செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தனர். இந்தக் காட்சி வைரலாக பரவிய நிலையில், கூடலூர் வன அலுவலர் திலீப்புக்கு புகார் வந்தது. பின்னர், வனவிலங்குகளைக் கொடுமைப்படுத்தியதாக சேரம்பாடி வனச்சரகர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர்.



அப்போது, ராஜநாகத்தை துன்புறுத்தியவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், ராமானுஜம், தினேஷ் குமார், யுகேஸ்வரன், விக்னேஷ் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த வனத்துறையினர், தலைமறைவாகி இருக்கும் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...