மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க ஸ்டாலின் முதலமைச்சரிடம் கோரிக்கை

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் அண்ணா நினைவிடத்துக்கு அருகில் இடம் ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அவரது குடும்பத்தார்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினர்.

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் அண்ணா நினைவிடத்துக்கு அருகில் இடம் ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அவரது குடும்பத்தார்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினர்.

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் அபாயக் கட்டாயத்தை எட்டியுள்ளது.  அவரது உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் முழக்கங்களை எழுப்பியவாறு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி, துரைமுருகன், ஐ.பெரியசாமி உள்ளிடோர் கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு உரிய கவுரவம் வழங்கவேண்டும். மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும், என செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அவரது குடும்பத்தார் வலியுறுத்தினர்.

இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி கருணாநிதியின் குடும்பத்தினரிடம் உறுதியளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  மேலும், சட்டம் அனுமதிக்கிறதா என அதிகாரிகளுடன் ஆலோசிப்பதாக அவர் கூறியதாகவும் தெரிகிறது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...